Wednesday 8 June 2011

குடும்ப மரம் ( Family Tree )


இன்றைய காலகட்டத்தில் கூட்டுக் குடும்பம் என்பது மிக அரிதாகி தனிக்குடும்பமே 99 % காணப்படுக்கின்றது. இவ்வாறு இருக்கின்ற பொழுது எம்மில் அநேகருக்கு எமது குடும்ப அங்கத்தவரில் சிலரையோ அல்லது பலரையோ அறிந்திருக்க மாட்டோம் நாம் புதிய இடத்திற்கோ , திருவிழாவிற்கோ அல்லது நிகழ்வொன்றுக்கோ செல்லும் போது அங்கு வருபவர்கள் "நீங்க அவான்ட மகளோ அல்லது நீங்க அவற்ற மகனோ" என்று கேட்க்கும் போது எமக்கு கேள்வி கேட்பவர் யார் என்று தெரியாததனால் சில சமயங்களில் அவர்களின் முகத்தை முறிப்பது போன்று செயற்ப்பட சந்தர்ப்பம் அதிகம் உருவாகின்றது. பின்னர் தான் எமது பெற்றோரிடமோ யாரிடமோ அவர்களைப்பற்றி அறிந்து கொள்கிறோம். இத்தகைய ஒரு பிரச்சனையைப் போக்க இணையத்தளத்தில் இலவசமாக உங்கள் குடுப்பம் பற்றிய தகவலையும் உங்கள் குடும்ப அங்கத்தவர்களையும் ஒரு மரம் போல் உருவாக்க தக்க இணையம் உங்களுக்காக.




இந்த இணையத்தளத்திற்கு செல்வதற்கு கிழே காணப்படும் நிழம்பு ( Photo ) ஐ சொடுக்கவும் 


சொடுக்கியதும் மேல காட்டப் பட்டவாறு ஒரு இணையத்தளம் உங்களுக்கு உருவாகும். பின்னர் கிழே காட்டப்பட்டுள்ள நிழம்பு ( Photo ) வில் உள்ளதை போன்று உங்கள் தகவலை அளித்து START MY FAMILY TREE ! என்பதனைச் சொடுக்கி இலவசக் கணக்கை ஆரம்பிக்கவும்.¨


இதில் START MY FAMILY TREE ! என்ற சொடுக்கியை சொடுக்கியதும் கிழே காட்டப்பட்டது போன்ற ஒரு பகுதி உங்களுக்கு காண்பிக்கப்படும். அதில் நீங்கள் உள்நுழைவதற்கு குறிப்பிட்ட முளுபெயருடன் தோன்றும்.


பின்னர் உங்கள் பெயரின் கீழ்ப் பகுதியில் edit info என்பதைச் சொடுக்கி உங்களை பற்றிய அதாவது உங்கள் சகோதரத்தின் தகவல் மற்றும் பெற்றோரின் தகவல் என்பவற்றைச் சேகரித்து விடுங்கள். 





இவ்வாறு இருக்கும் பகுதியில் Invite என்பதை சொடுக்கி உங்கள் உறவினர்களுக்கு Mail அனுப்பிவிடுங்கள் அவர்கள் அதில் தமது குடும்பம் பற்றிய தகவலை சேர்த்து விட்டு அவர்களது உறவினருக்கு அனுப்புவார்கள். சில நாட்கள் கழித்து உங்கள் Family Tree ஐ நோக்கினால் அது ஆல விருட்சம் போல் வளர்ந்திருப்பதைக் காணக்கூடியதாக இருக்கும்.

" நிலம் எனும் Geni இல் உரம் எனும் Mail ஐ அனுப்பி Family மரத்தை வளர்ப்போம்.!!" 


புத்தாடை பற்றிய சிறிய தகவல்.

மனிதன் என்றால் ஆசைகள் இருப்பது வழக்கம் தான். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ருசி உண்டு. அநேகர் புது ஆடை அணிவதில் மிகவும் ருசி கண்டிருப்பார்கள் அவர்களுக்கு ஒரு சிறிய பயன் தரு செய்தி.


பணக்காரருக்கு எந்தநாளும் திருவிழா தானுங்க... எப்பவும் புதுசு புதுசா டிசைன் டிசைனா ஆடை அணிவாங்க. ஆனா ஏழைகளுக்கு திருவிழா நாள் மட்டும் தான் கொண்டாட்டம் அண்டைக்கு தான் புது ஆடை வாங்கி அணிவாங்க அதுவும் எவ்வளவோ கஷ்டப்பட்டு முதல் நாள் அங்காடில அடிபாடு நெரிசல் பட்டு. அப்படி வாங்கின உடுப்பை திருவிழா நாள் அன்றைக்கு உரையை ( pakking ) கழட்டிட்டு போடுவாங்க.

இவ்வாறு நீங்கள் அணியும் ஆடையை ஒரு தடவை தோய்த்து உலர்த்திவிட்டு அணியுங்கள் உங்களை அண்டைக்கு யாரும் நினைக்க மாட்டார்கள் அது தானுங்க தும்மல் வராது எண்டு மறை முகமாய் சொல்லுறன். நீங்க புது ஆடையை அவ்வாறே அணிகின்ற போது ஆடை நெய்யும் இடத்தில் இருந்த தூசி ( Dust ) மற்றும் ஆடை நெய்யும் துணியின் தூசி என்பன அவ்வாறே இருக்கும். 



புது ஆடையைத் தோயக்கிறதா என்று யோசித்தீர்கள் என்றால். பிறகு உங்களை யாராவது நினைக்க நேரிடும் அதனுடன் சேர்த்து வைத்தியச் செலவு ஆடையின் செலவை விட அதிகமாகிவிடும்.

முக்கிய குறிப்பு :-
தரம் குறைந்த ஆடைகளை வாங்கினா அப்படியே புதுசாய் போட்டிடுங்க நான் சொன்னதை எல்லாம் செய்தீங்க என்றால் ஆடையின் சாயம் போயிடும் அப்புறம் புத்தாடை பழைய ஆடை ஆகிடும்.