Saturday, 6 November 2010

போட்டோ ஷாப்

என்ன நீங்க போட்டோ ஷாப் பிரியர்கள் தானே... அப்போ இது உபயோகப்படும் என்று நினைக்கிறன். இனி என்ன ஆரம்பிக்க வேண்டியது தானே உங்க வேலையை...

இதில் நீங்கள் வெள்ளையாக உள்ள பகுதியை அளித்துவிட்டு போட்டோ ஷாப்பில் உபயோகியுங்கள். இவ் வெள்ளைப்பகுதியை(படம் தவிர்ந்த:-உதாரணமாக இங்கே கிழே தரப்பட்டுள்ள படத்தில் சிவப்பு நிறத்தினால் எல்லை வரையப்பட்ட பகுதி தவிர்ந்த ஏனைய வெள்ளை நிறப்பகுதியை அழித்து உபயோகப் படுத்தவும். )



இதனை ஒரு கணப் பொழுதில் அளிக்க உங்கள் போட்டோ ஷாப்பில் உள்ள Magic Eraser Tool ஐப் பயன்படுத்துங்கள்.






























என்ன இந்தப் படங்கள் உங்களுக்கு உபயோகப்பட்டது தானே... அப்படி என்றால் உங்கள் கருத்தை ஒருக்கா பதிந்து விட்டு செல்லுங்களேன்.... இப்படிக்கு தளவாடி (தினேஷ்)

Friday, 29 October 2010

உதவி செய் அதை நன்றே செய். அது எவ்வுதவியாக இருப்பினும்...

ஒருவருக்கு உதவி செய்யும் போது அரைகுறையாகச் செய்யாதீர்கள். முக்கியமாக பணம் கொடுத்து உதவ விருப்பும்புவராக இருந்தால் பணத்தை கொஞ்சம் கொஞ்சமாக கொடுத்து உங்கள் பணத்தையும் அழித்து நீங்கள் உதவுபவர்களின் வாழ்க்கையையும் அழிக்காதீர்கள். உதாரணம் கேட்க்கும் நேரம் எல்லாம் பணத்தை கொடுத்தல் , உணவுக்கு மட்டும் பணம் அனுப்புதல் மாதம் மாதம் பணம் அனுப்புதல் என்பவற்றை செய்யாது நீங்கள் உதவும் தொகையை ஒரு முதலீடாக அவர்களுக்கு வழங்குங்கள்....இதனால் உங்கள் பணமும் சேமிக்கபடுகிறது அவர்களும் வாழ்க்கையில் முன்னேறுவார்கள்.






நீங்கள் காண்பவர்களில் மனம் குன்றியவர்கள் இருந்தால் அவர்களை உங்கள் அருகே வைத்து அன்பையும் பாசத்தையும் காட்டுங்கள் ஒரு வாரம் அல்ல ஒரு நாளில் அவர்களின் மனதில் ஏற்படும் மாறுதலை உணருவீர்கள். நீங்கள் இதில் வெற்றி அடைந்து விட்டீர்களானால் அதில் அடையும் இன்பத்தை வேறு எதிலும் அடைய மாட்டீர்கள்.



ஏழை என்றும் ஏழை அல்ல அதை புரிந்து கொள் மனிதா!
நீ உதவுவதால் உன் மிகப் பெரிய சொத்தாகிய நிம்மதி உன்னை வந்து சேரும்.

ஏழை உன்னை மதிப்பதாக இருந்தால் அது உன் மீது உள்ள பயம் என்று நினையாதே!
அதுவே உன்னை ஒருநாள் மனம் வருந்தச் செய்துவிடும்.

ஏழை வாடினாலும் சிரிப்பார்கள் காரணம் நிம்மதி அவர்களிடம் இருக்கும்
பணம் உள்ள நாம் நிம்மதியை பணத்துடன் விட்டு விட்டு அலுத்து கொண்டிருப்போம்.

ஏழைக்கு உதவி செய் ஆனால் செய்வது போன்று நடிக்காதே
அந்தப் பாவம் உன்னை ஒன்றும் செய்யாது உன் வம்சத்தையே பழி வாங்கிவிடும்.


ஏழைக்கு உதவு ஏழ்மையை ஒழித்துவிடு
பூமாதேவி புன்னகைப்பாள்..

உங்கள் தளவாடி ( ம.தினேஷ்)