Sunday 2 January 2011

சிறிய உரையாடல்...

ஒரு சிறிய பையனும் அவனது தந்தையும் வெளியே சென்றனர் அப்பொழுது அங்கே அவர்கள் சன நெரிசலான பாதை ஒன்றைக் கடக்க முற்ப்பட்டார்கள். அந்த சமயம் தந்தைக்கும் மகனுக்கும் இடையில் ஏற்ப்பட்ட ஒரு சிறிய உரையாடல் உங்களுக்காக.

தந்தை :- மகனே என் கையை இறுக்கி பிடித்துக்கொள் நாம் இந்தப் பாலம் 
                  கடக்கும் வரை.
மகன் :- இல்லை, நீங்கள் எனது கையைப் பிடியுங்கள்.

தந்தை :- நீ என் கையைப் பிடிப்பதற்கும் நான் உன்கையைப் பிடிப்பதற்கும்
                  என்ன வேறுபாடு?

மகன் :- நான் உங்கள் கையை பிடிக்கும் பொது சில சமயம் கையை விட்டு
                விடலாம் அது சில நேரங்களில் கஷ்டமாகிவிடும். ஆனால் நீங்கள் என் 
                கையைப் பிடித்தால்பாலம் கடக்கும் வரை விட மாட்டீர்கள். இது தான்  
                வேறு பாடு தந்தையே. ( என்று விளக்கம் கொடுத்தான் அந்தச் சின்னப் 
                 பையன்.)


இச் சிறிய உரையாடல் நகைச்சுவையாகத்தான் இருக்கின்றது ஆனால் கூறும் விடயம் உண்மையானதாகவும் மிகப் பெரிய ஒரு உள்ளானத கருத்தைக் கொண்டதாகவும் அமைகின்றது. எனவே நண்பர்களே நகைச்சுவையாக வாசியுங்கள் அத்துடன் அதில் புதைந்துள்ள கருத்தையும் புரிந்து நடவுங்கள்..